இந்திய ‘ஏ’ அணி பவுலர்கள் ஏமாற்றம்


இந்திய ‘ஏ’ அணி பவுலர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 23 Nov 2021 10:41 PM GMT (Updated: 23 Nov 2021 10:41 PM GMT)

இந்தியா ‘ஏ’ ,தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் நேற்று தொடங்கியது.


புளோம்பாண்டீன்,

இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள்) புளோம் பாண்டீனில் நேற்று தொடங்கியது. 

இதில் உள்ளூர் ஆடுகளத்தில் அபாரமாக பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 343 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் பீட்டர் மலான் (157 ரன், நாட்-அவுட்), டோனி டி ஜோர்ஸி (117 ரன்) சதம் அடித்தனர். 

இதனால் முதல் நாள் ஆட்டம் நவ்தீப் சைனி, உம்ரான் மாலிக், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்ட இந்திய பவுலர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.


Next Story