நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்திய அணி 339-8


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்திய அணி 339-8
x
தினத்தந்தி 26 Nov 2021 6:36 AM GMT (Updated: 26 Nov 2021 8:11 AM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 339 ரன்கள் எடுத்துள்ளது.

கான்பூர்,

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்திய அணியில் ஷ்ரயாஸ் அய்யர் 75  ரன்களும் ,ஜடேஜா 50 ரன்களுடனும் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜடேஜா இன்றைய நாள் ரன் ஏதும் எடுக்காமல் சவுதி வேகத்தில் பெவிலியன் திரும்பினார். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் அய்யர் அறிமுக டெஸ்ட்டிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 105 ரன்கள் எடுத்த நிலையில் சவுதி பந்தில் வெளியேறினார்.

அடுத்து வந்த விருத்திமான் சாகாவும், அக்சர் படேலும் வந்த வேகத்தில் வெளியேறினர். அஸ்வின் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக உமேஷ் யாதவ் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 5 பவுண்டரியுடன் 38 ரன்களுக், உமேஷ் யாதவ் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


Next Story