இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட்: மும்பைக்கு வந்தடைந்த வீரர்கள்


இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட்: மும்பைக்கு வந்தடைந்த வீரர்கள்
x
தினத்தந்தி 30 Nov 2021 3:34 PM GMT (Updated: 30 Nov 2021 3:35 PM GMT)

இந்தியா- நியூசிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

மும்பை,

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதல் கான்பூரில் நடந்துமுடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிந்தது. 

அந்த போட்டியில் வெற்றியில் விளிம்பில் இருந்த இந்திய அணி கடைசியில் கோட்டை விட்டது. தற்போது  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ம் தேதி முதல் வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளும் இன்று மாலை மும்பை வந்தடைந்தன. இந்த தகவலை மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் கூறினார்.


Next Story