ஐ.பி.எல். புதிய அணியான ஆமதாபாத் மீதான சர்ச்சை குறித்து விசாரிக்க கமிட்டி: ஜெய்ஷா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 Dec 2021 10:29 PM GMT (Updated: 4 Dec 2021 10:29 PM GMT)

ஐ. பி.எல்.லின் புது வரவான ஆமதாபாத் மீதான சர்ச்சை குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்படும் என ஜெய்ஷா கூறியுள்ளார்.

கொல்கத்தா,

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு புதிய வரவான ஆமதாபாத் அணியை ரூ.5,625 கோடிக்கு சி.வி.சி.கேப்பிட்டல் நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள சூதாட்ட நிறுவனங்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 90-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு செயலாளர் ஜெய்ஷா கூறுகையில், ஆமதாபாத் அணியை வாங்கியுள்ள சி.வி.சி.கேப்பிட்டல் நிறுவனம் மீது எழுந்து இருக்கும் சர்ச்சை குறித்து நடுநிலையான கமிட்டி அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஜெய்ஷா கூறினார்.

Next Story