இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்: புதிய அட்டவணை அறிவிப்பு
போட்டிக்கான புதிய அட்டவணையை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
ஜோகன்னஸ்பர்க்,
தென்ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் இந்திய கிரிக்கெட் அணியின், தென்ஆப்பிரிக்க பயணத்தில் சிறிய மாற்றம் செய்யப்படுவதுடன், 20 ஓவர் தொடர் பின்னர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிக்கான புதிய அட்டவணையை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வருகிற 26-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் ஜனவரி 3-ந் தேதியும், 3-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 11-ந் தேதியும் தொடங்குகிறது. முதல் இரு ஒருநாள் போட்டிகள் முறையே ஜனவரி 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பார்ல் மைதானத்திலும், கடைசி போட்டி 23 -ஆம் தேதி கேப்டவுனிலும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story