ஜோகன்னஸ்பெர்க் டெஸ்ட்: 3ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 188/6


ஜோகன்னஸ்பெர்க் டெஸ்ட்: 3ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 188/6
x
தினத்தந்தி 5 Jan 2022 10:40 AM GMT (Updated: 5 Jan 2022 10:40 AM GMT)

இந்தியா 161 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஜோகன்னஸ்பெர்க்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் கே எல் ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.ரவிச்சந்திரன் அஸ்வின் 46 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க அணியில் மேர்கோ ஜேன்சண் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து, 2ம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. 202 ரன்கள் பின்தங்கிய  நிலையில், தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  

இதையடுத்து, இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை துவங்கியது.  எதிர்பார்க்கப்பட்ட கே.எல் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். 2- ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு  85 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்காவை விட இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது.

இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக ஆடிய ரகானே 58 ரன்களிலும், புஜாரா 53 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் டக்-அவுட் ஆனார்.சிறப்பாக பந்துவீசிய ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது களத்தில் ஷர்துல் தாக்கூர் 4 ரன்களுடனும், விஹாரி 6 ரன்களுடனும் உள்ளனர். இந்தியா 161 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Next Story