ஒருநாள் கிரிக்கெட்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி!


ஒருநாள் கிரிக்கெட்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி!
x
தினத்தந்தி 19 Jan 2022 6:16 PM GMT (Updated: 19 Jan 2022 6:16 PM GMT)

விராட் கோலி, இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைந்துள்ளார்.

பார்ல்,

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போலண்ட் பார்கில் நடைபெற்றது. 

இந்த போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 51 ரன்கள் எடுத்ததுடன், புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதாவது இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு வெளியே 5,065 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. இதனை விராட் கோலி இன்று முறியடித்துள்ளார்.

சரியாக விளையாடாமல் சொதப்பி வந்த கோலி, தற்போது படிப்படியாக பார்முக்கு திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story