ஒமைக்ரான் எதிரொலி: ஆஸ்திரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் தள்ளிவைப்பு
10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியுள்ளதால், தள்ளிவைக்கப்படுகிறது.
வெலிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 3 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது.
இந்த தொடர் வருகிற 30-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக வெளிநாட்டுக்கு சென்று விட்டு திரும்பும் போது நியூசிலாந்து வீரர்கள் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டி உள்ளது. இதில் தளர்வு அளிக்க அந்த நாட்டு அரசு மறுத்து விட்டது.
இதன் காரணமாக இந்த தொடர் தள்ளிவைக்கப்படுவதாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிவித்துள்ளன.
Related Tags :
Next Story