ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இலங்கை அணி அபார வெற்றி
இலங்கை அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பல்லகெலே,
இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்று நடந்தது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியின் பேட்டிங் வரிசை இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல் சரிந்தது.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 24.4 ஓவர்களில் 70 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Related Tags :
Next Story