வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர்: அணிக்கு திரும்பும் ரோகித்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Jan 2022 12:21 AM GMT (Updated: 26 Jan 2022 12:21 AM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா விளையாட தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

மும்பை,                                        

இந்திய ஒரு நாள் போட்டி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இடது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக தென்ஆப்பிரிக்க தொடரில் விளையாடவில்லை. தற்போது அவர் உடல்தகுதியை எட்டி விட்டார். அடுத்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் விளையாட தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார். 

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஆட்டம் ஆமதாபாத்தில் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இந்த வாரத்தில் அறிவிக்கப்படுகிறது. அத்துடன் விராட் கோலி விலகியதால் டெஸ்ட் கேப்டன்ஷிப்பும் ரோகித் சர்மா வசம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடல்தகுதி பிரச்சினையால் நீக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. புவனேஷ்வர்குமார், அஸ்வின் ஆகிய மூத்த வீரர்களின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.


Next Story