இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வெற்றி தொடருகிறது


இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வெற்றி தொடருகிறது
x
தினத்தந்தி 18 Feb 2022 11:07 PM GMT (Updated: 18 Feb 2022 11:07 PM GMT)

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா வெற்றி தொடருகிறது.

இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது. முதல் 3 போட்டியிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்ட ஆஸ்திரேலிய அணி ‘டாஸ்’ ஜெயித்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 46 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஜய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில அபார வெற்றி பெற்றது. 39 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 48 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.


Next Story