“ஜோஸ் பட்லரை போல் சதம் அடிக்காதது ஏன் என எனது மகள்கள் கேள்வி எழுப்புகிறார்கள்” - வார்னர்


“ஜோஸ் பட்லரை போல் சதம் அடிக்காதது ஏன் என எனது மகள்கள் கேள்வி எழுப்புகிறார்கள்” - வார்னர்
x
தினத்தந்தி 21 April 2022 11:20 PM GMT (Updated: 21 April 2022 11:20 PM GMT)

ஜோஸ் பட்லர் சதம் அடித்த ஆட்டங்களை தனது 3 மகள்களும் மகிழ்ச்சியுடன் கண்டு களித்ததாக டேவிட் வார்னர் தெரிவித்தார்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி பந்தாடியது. இந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் குவித்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அளித்த பேட்டியில், ‘பந்து வீச்சாளர்கள் தங்களது
பணியை அருமையாக செய்தார்கள். 

இதனால் எங்களது வேலை எளிதாகிவிட்டது. பந்து வீச்சாளர்களுக்கே எல்லா பெருமையும் சாரும். ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் அணி) போல் என்னால் ஏன் சதம் அடிக்க முடியவில்லை? என்பதை அறிந்து கொள்ள எனது குழந்தைகள்
விரும்புகிறார்கள். ஆனால் இது எளிதான விஷயமல்ல. தற்போதைய நிலையில் 20 ஓவர் கிரிக்கெட்டில் 60 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் கிடையாது. 

ஜோஸ் பட்லர் சதம் அடித்த ஆட்டங்களை எனது 3 மகள்களும் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர். அதன் பிறகு அவரை போல் மைதானத்துக்கு வெளியே செல்லும் வகையில் மெகா சிக்சர் அடிக்காதது ஏன்? என்று என்னிடம் தொடர்ந்து கேள்வி கணைகளை தொடுக்கிறார்கள். கிரிக்கெட் ஆட்டத்தை எனது மகள்கள் பார்ப்பது எனக்கு உற்சாகம் அளிக்கிறது’ என்றார்.

Next Story