இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டன் பும்ரா


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டன் பும்ரா
x

கோப்புப்படம் 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பர்மிங்காம்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது.

டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையாததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனவும் ,அவர் இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு வேகப்பந்துவீச்சாளரான பும்ராவுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது, நாளை நடைபெறும் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது.

28 வயதான பும்ரா இதற்கு முன்பு எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை. மேலும் 1987-ம் ஆண்டு கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் அவர் பெற உள்ளார்.


Next Story