இலங்கை- ஆஸ்திரேலியா டி20 போட்டியின் போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தம் !


இலங்கை- ஆஸ்திரேலியா டி20 போட்டியின் போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தம் !
x

இரு அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டியின் போது திடீரென மழை பெய்ததால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியை கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.அதன்படி இரு அணிகளும் மோதும் இன்று முதல் டி20 கிரிக்கெட் போட்டியானது இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த்து.அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது .12 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்த அந்த அணியின் நடுவரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ரன்கள் எடுக்க தடுமாறியது . இதனால் இலங்கை 19.3 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 129 ரன்கள் இலக்குடன் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணி 11.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்திருந்த போது போட்டியின் குறுக்கே திடீரென மழை பெய்தது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. மழை நின்ற பிறகு மீண்டும் போட்டிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு வேளை மழை விடாது தொடர்ந்து பெய்துகொண்டிருந்தால், டிஎல் விதிமுறைப்படி ஆஸ்திரேலிய அணியே வெற்றிபெறும் அணியாக முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story