சாம்பியன்ஸ் லீக் தொடர்: இறுதி போட்டிக்கு முன்னேறியது லிவர்பூல்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் லிவர்பூல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மாட்ரிட்,
ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் லீக்கில் விளையாடும் முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
காலிறுதி ஆட்டங்கள் முடிவில் ரியல் மாட்ரிட், ரோமா, பேயர்ன் முனிச், லிவர்பூல் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் இரண்டு லெக்காக நடைபெற்றன.
கடந்த மாதம் 25 மற்றும் 26-ந்தேதிகளில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2-1 என போயர்ன் முனிச்சையும், லிவர்பூல் 5-2 என ரோமாவையும் வீழ்த்தியிருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் ரோமா - லிவர்பூல் அணிகளுக்கு இடையிலான 2-வது லெக் நடைபெற்றது. கடைசி கட்டத்தில் ரோமாவிற்கு எதிராக 7-6 என நூலிழையில் வெற்றி பெற்று லிவர்பூல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இறுதி போட்டியில் ரியல் மாட்ரிட் அணியுடன் லிவர்பூல் அணி எதிர்கொள்கிறது.
Related Tags :
Next Story