இந்திய கால்பந்து அணி தேசிய பயிற்சி முகாம்; 30 வீரர்கள் தேர்வு


இந்திய கால்பந்து அணி தேசிய பயிற்சி முகாம்; 30 வீரர்கள் தேர்வு
x
தினத்தந்தி 11 May 2018 1:59 AM GMT (Updated: 11 May 2018 1:59 AM GMT)

இந்திய கால்பந்து அணியின் தேசிய பயிற்சி முகாமுக்கு 30 வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.

புதுடெல்லி,

அடுத்த மாதம் ஜூன் 1ம் தேதி மும்பையில் ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கிறது. இதற்காக இந்திய கால்பந்து அணி தேசிய பயிற்சி முகாமுக்கு மொத்தம் 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து, சீன தைபே அணிகள் கலந்து கொள்கின்றன. மேலும் வரும் ஜனவரி மாதம் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியிலும் இந்திய அணி பங்கேற்கிறது. இதற்காக வீரர்கள் தேர்வு செய்யும் வகையில் பயிற்சி முகாம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் தலைமையில்  நடைபெறுகிறது.

நியூசிலாந்து, தைபே அணிகளை எதிர்கொள்வது சிக்கலானது. வீரர்கள் காயமின்றி இருந்தால் தான் போட்டிகளை நன்றாக எதிர்கொள்ள முடியும். தேசிய பயிற்சி முகாமுக்கு 30 வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து தேசிய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கேப்டன் சுனில் சேத்ரி உள்பட 30 பேர் முகாமில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

மேலும்,’இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டிகள் நமது அணி வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும். இதில் வலிமையான அணிகளை எதிர்கொள்ள இருக்கிறோம். ஆசியக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக நமது அணிக்கு பல்வேறு வெளிநாட்டு அணிகளுடன் மோதும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்’ என பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன் கூறினார்.

Next Story