பிரேசில் கால்பந்து வீரா் ரொனால்டினோ ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்கிறார்


பிரேசில் கால்பந்து வீரா் ரொனால்டினோ ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்கிறார்
x
தினத்தந்தி 25 May 2018 1:49 AM GMT (Updated: 25 May 2018 1:49 AM GMT)

பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான ரொனால்டினோ ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. #Ronaldinho

வாசிங்டன்,

பிரேசில் நாட்டின் திறன்மிக்க கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் ரொனால்டினோ, கால்பந்து உலகின் ஜாம்பவான் ஆவார். ஆதனால் அவருக்கு கால்பந்து ரசிகா்களை விடவும் பெண் ரசிகா்களை அதிகம் கொண்டவா். தற்போது அனைத்து பெண் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தரும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஓய்வு பெற்ற ரொனால்டினோ வரும் ஆகஸ்ட் மாதம் ரியோ டி ஜெனிரோவில் உள்ள தனது வீட்டிலேயே இரு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார் என்பது அந்த செய்தியாகும்.

பினனர், இதுக்குறித்து ரியோ டி ஜெனிரோ என்ற செய்தித்தாளில் வெளிவந்ததாவது,

“இந்த திருமண விழா மூன்று-நபர் சிவில் தொழிற்சங்கத்தின் ஒரு அரிய வடிவமாக இருக்கும்”, என ஐக்கிய அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது. மேலும், அந்த குறிப்பு, பிரேசில் நாட்டின் சட்டத்திற்கு விரோதமாக இருக்கும் இந்த திருமணத்திற்கு ஆறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்பது குறிப்பிடதக்கது. "ஆனால் இரண்டு பெண்களுக்கு ஒரு திருமண விழா என்பதால் இதனை இரு திருமணங்களாக கருத வேண்டாம் என்று ஒரு வித்தியாசமான விளக்கம் அளிக்கிறது”  
 
இந்நிலையில் இந்த இரு பெண்மணிகளும் முன்னாள் கால்பந்து வீரர்களான பிரிஸ்கில்லா கோலிஹோ மற்றும் பீட்ரிஸ் சவுஸா ஆவார், இவர்கள் இருவரும் டிசம்பர் மாதம் முதலே ரொனால்டினோவுடன் தங்கி வருகின்றனா் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது.

Next Story