ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் ‘டிப்ஸ்’ வழங்கிய ரொனால்டோ


ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் ‘டிப்ஸ்’ வழங்கிய ரொனால்டோ
x
தினத்தந்தி 20 July 2018 9:00 PM GMT (Updated: 20 July 2018 8:44 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி 2-வது சுற்றுடன் வெளியேறியதும் அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் கிரீஸ் நாட்டில் கோஸ்டா நவரினோ என்ற சொகுசு விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்தார்.

லண்டன், 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி 2-வது சுற்றுடன் வெளியேறியதும் அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் கிரீஸ் நாட்டில் கோஸ்டா நவரினோ என்ற சொகுசு விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்தார். அங்கு தங்கி இருந்த போது ஓட்டல் ஊழியர்களின் உபசரிப்பும், சேவையும் அவருக்கு மிகவும் பிடித்து போனது. இதனால் ஓட்டலை விட்டு கிளம்பும் போது ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் வெகுமதியாக (டிப்ஸ்) வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். காசோலையாக வழங்கிய அவர் அதை ஊழியர்களுக்கு பிரித்து கொடுக்கும்படி ஓட்டல் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார்.

Next Story