சென்னையின் எப்.சி. அணி வீரர் தனபால் கணேசுக்கு ஆபரே‌ஷன்


சென்னையின் எப்.சி. அணி வீரர் தனபால் கணேசுக்கு ஆபரே‌ஷன்
x
தினத்தந்தி 28 Sep 2018 8:21 PM GMT (Updated: 28 Sep 2018 8:21 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடருக்கான சென்னையின் எப்.சி. அணியின் நடுகள வீரரான தமிழகத்தை சேர்ந்த தனபால் கணேஷ் இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்தார்.

சென்னை, 

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடருக்கான சென்னையின் எப்.சி. அணியின் நடுகள வீரரான தமிழகத்தை சேர்ந்த தனபால் கணேஷ் இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் தனபால் கணேசுக்கு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆபரே‌ஷன் நடைபெற்றது. ஆபரே‌ஷன் வெற்றிகரமாக முடிந்ததாகவும், அவர் விரைவில் குணம் அடைந்து களம் திரும்ப வாழ்த்துவதாகவும் சென்னையில் எப்.சி. அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையின் எப்.சி. அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வைத்த தனபால் கணேஷ் காயத்தால் இந்த சீசனில் விளையாட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.


Next Story