ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா-டெல்லி ஆட்டம் ‘டிரா’


ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா-டெல்லி ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 20 Oct 2018 10:15 PM GMT (Updated: 20 Oct 2018 9:39 PM GMT)

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் மோதின.

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிற்பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் (48-வது நிமிடம்) கேரளா அணியின் வினீத் இடது காலால் பந்தை உதைத்து கோலாக்கினார். 84-வது நிமிடத்தில் டெல்லி அணி வீரர் அன்ட்ரிஜா காலுட்ஜெரோவிச் பதில் கோல் திருப்பினார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 3-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி ஒரு வெற்றி, 2 டிரா கண்டுள்ளது. 3-வது ஆட்டத்தில் களம் கண்ட டெல்லி அணி 2 டிரா, ஒரு தோல்வி கண்டு இருக்கிறது. ஜாம்ஷெட்பூரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Next Story