ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி ஆட்டம் ‘டிரா’


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 23 Oct 2018 8:33 PM GMT (Updated: 23 Oct 2018 8:33 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா ஆனது.

புதுடெல்லி,

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க அதிக தீவிரம் காட்டினாலும் கடைசி வரை கோல் எதுவும் விழவில்லை.

சென்னை அணி வீரர்கள் எதிரணி கோல் எல்லையை முற்றுகையிட்டு 17 முறை ஷாட்டுகள் அடித்தனர். ஆனால் சென்னை அணியின் முயற்சிகளை டெல்லி கோல்கீப்பர் பிரான்சிஸ்கோ முறியடித்தார். முடிவில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. முதல் 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த நடப்பு சாம்பியனான சென்னை அணி முதல் டிரா கண்டு ஒரு புள்ளி பெற்றுள்ளது. டெல்லி அணி சந்தித்த 3-வது டிரா இதுவாகும்.

கோவா நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Next Story