ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியுடன் ‘டிரா’ செய்தது, ஜாம்ஷெட்பூர்


ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியுடன் ‘டிரா’ செய்தது, ஜாம்ஷெட்பூர்
x
தினத்தந்தி 25 Oct 2018 10:03 PM GMT (Updated: 25 Oct 2018 10:03 PM GMT)

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து கவுகாத்தியுடனான போட்டியில் ஜாம்ஷெட்பூர் டிரா செய்தது.

கவுகாத்தி, 

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடரில் நேற்றிரவு கவுகாத்தியில் அரங்கேறிய ஜாம்ஷெட்பூர் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. கவுகாத்தி அணியில் பார்தோலோம் ஒக்பேச் (20 நிமிடம்), ஜாம்ஷெட்பூர் அணியில் பாருக் சவுத்ரி (49-வது நிமிடம்) கோல் போட்டனர்.

கொல்கத்தாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கும் 19-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி ஒரு டிரா, 3 தோல்வி கண்டுள்ள சென்னை அணி, வெற்றிக்கணக்கை இன்றைய ஆட்டத்திலாவது தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Next Story