ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’


ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 29 Oct 2018 10:45 PM GMT (Updated: 29 Oct 2018 9:01 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா-ஜாம்ஷெட்பூர் இடையிலான ஆட்டம் டிரா ஆனது.

ஜாம்ஷெட்பூர்,

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஜாம்ஷெட்பூர் அணி முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த அணி வீரர்கள் டிம் காஹில் 3-வது நிமிடத்திலும், மிச்செல் சூசைராஜ் 31-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஆனால் கடைசி கட்டத்தில் ஆக்ரோஷமாக தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த கேரளா அணி சரிவில் இருந்து மீண்டு சமநிலையை எட்டியது. கேரளா அணி தரப்பில் லாவிஸ்லா ஸ்டோஜனோவிச் 71-வது நிமிடத்திலும், சி.கே.வினீத் 86-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள்.

டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.

Next Story