ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தி கவுகாத்தி அணி 3-வது வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தி கவுகாத்தி அணி 3-வது வெற்றி
x
தினத்தந்தி 30 Oct 2018 10:30 PM GMT (Updated: 30 Oct 2018 7:55 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், டெல்லியை வீழ்த்தி கவுகாத்தி அணி 3-வது வெற்றியை ருசித்தது.

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 23-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) எதிர்கொண்டது. முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில் கடைசி 10 நிமிடங்களில் கவுகாத்தி அணியினர் அமர்க்களப்படுத்தினர்.

82-வது நிமிடத்தில் பெடரிகோ காலெகோ, 90-வது நிமிடத்தில் கேப்டன் பார்த்தோலோம் ஒக்பேச் ஆகியோர் கவுகாத்தி அணிக்காக கோல் போட்டனர். முடிவில் கவுகாத்தி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. இதுவரை தோல்வியே சந்திக்காத கவுகாத்தி அணி 3 வெற்றி, 2 டிரா என்று 11 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. டெல்லி அணிக்கு விழுந்த 3-வது உதை இதுவாகும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.


Next Story