ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி- ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’


ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி- ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 4 Nov 2018 9:45 PM GMT (Updated: 4 Nov 2018 7:09 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், டெல்லி மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.

புதுடெல்லி,

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு டெல்லியில் நடந்த 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

டெல்லி அணியில் லாலியன்ஜூலா சாங்தே (55-வது நிமிடம்), அட்ரியா கார்மோனா (58-வது நிமிடம்), ஜாம்ஷெட்பூர் அணியில் செர்ஜியோ சிடோன்ச்சா (39-வது நிமிடம்), டிரி (72-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத டெல்லி அணி சந்தித்த 4-வது டிரா இதுவாகும். 7-வது லீக்கில் ஆடிய ஜாம்ஷெட்பூர் அணி 2 வெற்றி, 5 டிரா என்று 11 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-பெங்களூரு எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story