ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் கோவா அணி


ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் கோவா அணி
x
தினத்தந்தி 12 March 2019 10:32 PM GMT (Updated: 12 March 2019 10:32 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்தின் இறுதிப்போட்டிக்கு கோவா அணி தகுதிபெற்றது.

கோவா,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், கோவா எப்.சி.-மும்பை சிட்டி அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டம் கோவாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் 6-வது நிமிடத்தில் மும்பை வீரர் ரபெல் பாஸ்டோஸ் கோல் அடித்தார். கோவா வீரர்களால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் மும்பை சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த வெற்றியால் அந்த அணிக்கு பலன் இல்லை. ஏற்கனவே அரைஇறுதியின் முதலாவது சுற்றில் கோவா 5-1 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தி இருந்தது. இரண்டு சுற்று ஆட்டங்களின் அடிப்படையில் 5-2 என்ற கோல் முன்னிலையுடன் கோவா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

வருகிற 17-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.- எப்.சி.கோவா அணிகள் சந்திக்கின்றன.


Next Story