கால்பந்து வீரர் ஜோஸ் ஆன்டனியோ கார் விபத்தில் பலி
சர்வதேச கால்பந்து வீரர் ஜோஸ் ஆன்டனியோ கார் விபத்து ஒன்றில் பலியானார்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சர்வதேச கால்பந்து வீரர் ஜோஸ் ஆன்டனியோ ரியெஸ் (வயது 35). ஆர்சினால் மற்றும் செவில்லா அணிக்காக விளையாடியுள்ள இவர் கார் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.
இதனை ஸ்பெயின் கிளப் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணிக்காக இவர் விளையாடியுள்ளார்.
அவரது மறைவுக்கு சக வீரர்களான தியரி ஹென்றி மற்றும் செர்கியோ ரமோஸ் அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து ஸ்பெயினின் செகுன்டா மண்டலத்தில் இந்த வாரம் விளையாட இருந்த 7 போட்டிகள் வருகிற செவ்வாய் கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story