இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் செலஸ்டின் மரணம்
தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பரான செலஸ்டின் (வயது 73) சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
சென்னை,
தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பரான செலஸ்டின் (வயது 73) சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் மரணம் அடைந்தார். ரிசர்வ் வங்கி முன்னாள் ஊழியரான செலஸ்டின் தமிழக கால்பந்து அணிக்காக பல ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். அவர் இந்திய கால்பந்து அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story