சென்னையில் இன்று தொடங்கும் மாற்றுத்திறனாளி கால்பந்து போட்டியை நிறுத்திவைக்க ஐகோர்ட்டு மறுப்பு


சென்னையில் இன்று தொடங்கும் மாற்றுத்திறனாளி கால்பந்து போட்டியை நிறுத்திவைக்க ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 2 Aug 2019 9:45 PM GMT (Updated: 2 Aug 2019 9:23 PM GMT)

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி ஆகஸ்டு 3-ந் தேதி(இன்று) தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.

சென்னை, 

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மனோரஞ்சனி என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி ஆகஸ்டு 3-ந் தேதி(இன்று) தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை. போட்டிக்கு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இந்த போட்டிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் வகையில் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை போட்டியை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் ஆகியோர், ‘மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நடத்தப்படும் சர்வதேச அளவிலான இந்த போட்டியை நிறுத்தினாலோ, தள்ளிவைத்தாலோ மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோய் விடும். எனவே, போட்டியை தள்ளிவைக்க முடியாது. அதேநேரத்தில் இந்த போட்டியில் மனுதாரர் கோரிக்கையை ஏற்று தினேஷ்குமார், பிரேம் சங்கர், கெவின்ஜார்ஜ் ஆகியோரை போட்டி அமைப்பாளர்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Next Story