அர்ஜென்டினா கால்பந்து முன்னாள் வீரர் மரணம்


அர்ஜென்டினா கால்பந்து முன்னாள் வீரர் மரணம்
x
தினத்தந்தி 13 Aug 2019 11:09 PM GMT (Updated: 13 Aug 2019 11:09 PM GMT)

அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரர் ஜோஸ் லூயிஸ் பிரவுன் நேற்று மரணமடைந்தார்.

பியூனஸ் அயர்ஸ்

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் ஜோஸ் லூயிஸ் பிரவுன் (வயது 62) மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார். 1986-ல் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜென்டினா அணியில் இவரும் இடம் பெற்று இருந்தார். அந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-2 என்ற கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தியது. இதில் அர்ஜென்டினா அணிக்காக முதல் கோல் அடித்தவர், லூயிஸ் பிரவுன் தான். அர்ஜென்டினா அணிக்காக 36 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள அவர் ஜூனியர் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.


Next Story