ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி அக்டோபர் 20-ந் தேதி தொடக்கம்


ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி அக்டோபர் 20-ந் தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 23 Aug 2019 9:30 PM GMT (Updated: 23 Aug 2019 9:14 PM GMT)

10 அணிகள் பங்கேற்கும் 6-வது இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் தொடர் கொச்சியில் அக்டோபர் 20-ந் தேதி தொடங்குகிறது.

புதுடெல்லி, 

10 அணிகள் பங்கேற்கும் 6-வது இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் தொடர் கொச்சியில் அக்டோபர் 20-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான லீக் சுற்று அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. தொடக்க லீக் ஆட்டத்தில் 2 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-2 முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. எல்லா ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்குகின்றன. லீக் ஆட்டங்கள் அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி 23-ந் தேதி வரை நீடிக்கிறது. போட்டி நடைபெறும் இடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ‘பிளே-ஆப்’ மற்றும் இறுதிப்போட்டி தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story