ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு ஆட்டம் ‘டிரா’


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 3 Nov 2019 11:25 PM GMT (Updated: 3 Nov 2019 11:25 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு அணிகளுக்கிடையிலான ஆட்டம் டிராவானது.

ஜாம்ஷெட்பூர்,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த ஜாம்ஷெட்பூர் எப்.சி.- பெங்களூரு எப்.சி. இடையிலான லீக் ஆட்டம் கோல் இன்றி (0-0) ‘டிரா’வில் முடிந்தது. பெங்களூரு வீரர்கள் இலக்கை நோக்கி அடித்த 9 ஷாட்டுகளை ஜாம்ஷெட்பூர் கோல் கீப்பர் சுப்ரதா பால் தடுத்து நிறுத்தி ஹீரோவாக மின்னினார்.

இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் ‘டிரா’ தான் கண்டுள்ளது. போட்டியில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். 6-ந்தேதி நடக்கும் அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.


Next Story