சென்னையின் எப்.சி. போட்டி அட்டவணையில் மாற்றம்


சென்னையின் எப்.சி. போட்டி அட்டவணையில் மாற்றம்
x
தினத்தந்தி 29 Dec 2019 11:20 PM GMT (Updated: 29 Dec 2019 11:20 PM GMT)

சென்னையின் எப்.சி. போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கடந்த 12-ந்தேதி கவுகாத்தியில் நடக்க இருந்த சென்னையின் எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இடையிலான ஆட்டம் போராட்டம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆட்டம் பிப்ரவரி 25-ந்தேதி கவுகாத்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதே போல் போட்டி அட்டவணையிலும் சிறு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையின் எப்.சி.- நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. இடையே பிப்ரவரி 7-ந்தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருந்த ஆட்டம் அதே இடத்தில் பிப்.9-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story