இந்தியன் சூப்பர் லீக்: சென்னை-பெங்களூரு ஆட்டம் ‘டிரா’


இந்தியன் சூப்பர் லீக்: சென்னை-பெங்களூரு ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 9 Feb 2020 10:15 PM GMT (Updated: 9 Feb 2020 8:29 PM GMT)

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னை-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

சென்னை, 

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த சென்னையின் எப்.சி.-பெங்களூரு எப்.சி. இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. 

சென்னை வீரர்கள் இலக்கை நோக்கி அடித்த 3 ஷாட்டுகளும் தடுக்கப்பட்டது. 88-வது நிமிடத்தில் சென்னை வீரர் தோய்சிங் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அடுத்த ஆட்டத்தில் அவரால் விளையாட முடியாது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்- ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

Next Story