ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையில் நடைபெறும் அரைஇறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையில் நடைபெறும் அரைஇறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை
x
தினத்தந்தி 26 Feb 2020 11:26 PM GMT (Updated: 26 Feb 2020 11:26 PM GMT)

சென்னையில் நடைபெறும் ஐ.எஸ்.எல். கால்பந்தின் அரைஇறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

சென்னை,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடைபெறும் அரை இறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை வரை நேரு ஸ்டேடியத்தில் (வாசல் எண் 10) உள்ள புக் மை ஷோ பாக்ஸ் ஆபீசில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்றும் போட்டி நாளன்று டிக்கெட் விற்பனை நேரு உள்விளையாட்டு அரங்குக்கு (வாசல் எண் 1) மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புக் மை ஷோ செயலி மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story