ஜெர்மனியின் பிரீமியர் லீக் கால்பந்து வீரர்கள் 6 பேருக்கு கொரோனா


ஜெர்மனியின் பிரீமியர் லீக் கால்பந்து வீரர்கள் 6 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 May 2020 3:36 AM GMT (Updated: 20 May 2020 3:36 AM GMT)

ஜெர்மனியின் பிரீமியர் லீக் கால்பந்து வீரர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பெர்லின்

ஜெர்மனியின் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் விளையாடும் 748 வீரர்களின் மாதிரியில் மூன்று வெவ்வேறு கிளப்புகளைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

கொரோனா பாதிப்பு  கண்டறியப்பட்ட வீரர்கள் அல்லது கிளப் ஊழியர்கள் இப்போது ஏழு நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று லீக் அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மார்ச் 13 அன்று நிறுத்தப்பட்ட பருவ போட்டிகள்  ஜூன் மாதம் மறுதொடக்கம் செய்யப்படுவதால் பயிற்சியை எப்போது அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து லீக் அமைப்பு அடுத்த வார தொடக்கத்தில் தீர்மானிக்கும்.

Next Story