பாலியல் பொம்மைகள் முன் கால்பந்து போட்டியை நடத்திய கால்பந்து கிளப்புக்கு அபராதம்


பாலியல் பொம்மைகள் முன் கால்பந்து போட்டியை நடத்திய கால்பந்து கிளப்புக்கு அபராதம்
x
தினத்தந்தி 21 May 2020 9:24 AM GMT (Updated: 21 May 2020 11:46 AM GMT)

பாலியல் பொம்மைகள் முன் கால்பந்து போட்டியை நடத்திய கால்பந்து கிளப்புக்கு 100 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

சியோல்

தென்கொரியாவில், கால்பந்து போட்டிகள் துவங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாததால் பாலியல் பொம்மைகள் இருக்கையில் அமர வைத்துவிட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தென்கொரியாவின் கால்பந்து போட்டியான கே-லீக் போட்டி கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், எஃப்சி சியோல் நடத்திய போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே இருக்கைகள் பாலியல் பொம்மைகளைக் கொண்டு நிரபப்பட்டிருந்தது.

இதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தன.எனவே, கால்பந்து போட்டிக்குழு இதற்கு வருத்தத்துடன், மன்னிப்பும் கோரியுள்ளது. அதில் “இந்த பொம்மைகள் ரசிகர்கள் இல்லாததால் பாலியல் பொம்மை தாயாரிக்கும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது அவமானமான ஒன்றுதான்”என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எஃப்சி சியோலுக்கு  கே-லீக் 100 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.கே-லீக்கின் அறிக்கைபடி இது, பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்கு பெருத்த அவமானம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

Next Story