ஆசிய கிளப் சாம்பியன்ஸ் லீக்: 3-வது அணியாக பெங்களூரு எப்.சிக்கு வாய்ப்பு - இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு


ஆசிய கிளப் சாம்பியன்ஸ் லீக்: 3-வது அணியாக பெங்களூரு எப்.சிக்கு வாய்ப்பு - இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு
x
தினத்தந்தி 4 Jun 2020 11:33 PM GMT (Updated: 4 Jun 2020 11:33 PM GMT)

ஆசிய கிளப் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிக்கான, 3-வது அணியாக பெங்களூரு எப்.சிக்கு வாய்ப்பு வழங்க இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,  

அடுத்த ஆண்டு நடக்கும் ஆசிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இந்தியாவில் இருந்து எப்.சி.கோவா, ஒன்றாக இணைந்துள்ள அட்லெடிகோ டி கொல்கத்தா- மோகன் பகான் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றிருந்தன. இந்த நிலையில் இந்த போட்டிக்கு இந்தியாவில் இருந்து 3-வது அணியாக கலந்து கொள்ளும் வாய்ப்பை ஐ.எஸ்.எல். முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.க்கு வழங்குவது என்று இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.


Next Story