இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மரணம்


இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மரணம்
x
தினத்தந்தி 10 Aug 2020 12:27 AM GMT (Updated: 10 Aug 2020 12:27 AM GMT)

இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மணிதோம்பி சிங் மரணமடைந்தார்.

கொல்கத்தா, 

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரரும், மோகன் பகான் கிளப்பின் முன்னாள் கேப்டனுமான மணிதோம்பி சிங் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மணிப்பூர் மாநிலம் இம்பால் அருகே உள்ள சொந்த ஊரில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு மனைவியும், 8 வயதில் மகனும் உள்ளனர்.

மணிதோம்பி சிங், 2002-ம் ஆண்டு பூசான் ஆசிய விளையாட்டில் இந்திய அணிக்காக பங்கேற்றுள்ளார். இதே ஆண்டில் வியட்னாமில் நடந்த எல்.ஜி. கோப்பையை வென்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் முக்கிய வீரராக அங்கம் வகித்தார். அது இந்திய கால்பந்து அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய முதல் சர்வதேச கோப்பையாகும். அவரது மறைவுக்கு இந்திய கால்பந்து சம்மேளனமும், மோகன் பகான் கிளப்பும் இரங்கல் தெரிவித்துள்ளன.


Next Story