ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி பெறுமா? கோவாவுடன் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி பெறுமா? கோவாவுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 18 Dec 2020 10:30 PM GMT (Updated: 18 Dec 2020 8:25 PM GMT)

11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.

கோவா, 

இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவாவை எதிர்கொள்கிறது. சென்னை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது. அதன் பிறகு 2 டிரா, 2 தோல்வியை தழுவியுள்ளது. சரிவில் இருந்து மீண்டு சென்னை அணி 2-வது வெற்றியை ருசிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இவ்விரு அணிகளும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கோவா 9 முறையும், சென்னை அணி 7 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.

Next Story