ஐ.எஸ்.எல். கால்பந்து: சுயகோலால் சென்னை அணி தோல்வி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சுயகோலால் சென்னை அணி தோல்வி
x
தினத்தந்தி 10 Feb 2021 11:13 PM GMT (Updated: 10 Feb 2021 11:13 PM GMT)

11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.

கோவா, 

11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 89-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை எதிர்கொண்டது. பந்து அதிகமான நேரம் சென்னை அணியினர் (53 சதவீதம்) பக்கம் சுற்றினாலும், இலக்கை நோக்கி 4 ஷாட்டுகள் அடித்த போதிலும் எதிரணியின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. ஆட்டம் கோல் இன்றி டிராவை நோக்கி நகர்ந்த நிலையில் கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) சென்னை அணி அதிர்ச்சியை சந்தித்தது. ஐதராபாத் வீரர் டேவிட் கிரான்ட் கோல் நோக்கி இடது காலால் உதைத்த பந்து சென்னை வீரர் என்ஸ் சிபோவிச்சின் காலில் பட்டு வலைக்குள் புகுந்து சுயகோலாக மாறியது. முடிவில் ஐதராபாத் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது. அதே சமயம் 17-வது லீக்கில் விளையாடி 3 வெற்றி, 8 டிரா, 6 தோல்வி என்று 17 புள்ளிகளுடன் 8-வது இடம் வகிக்கும் சென்னை அணியின் அரைஇறுதி வாய்ப்பு மங்கி போய் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஒடிசா-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story