தெற்காசிய கால்பந்து போட்டி : நேபாள அணி தொடர்ந்து ஆதிக்கம்.
வங்காளதேச அணியுடன் நடந்த போட்டி டிராவில் முடிந்த காரணத்தால் இந்திய அணி புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது.
மாலத்தீவு
13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
தற்போதைய புள்ளி பட்டியல் நிலவரப்படி நேபாள அணி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. மாலத்தீவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நேபாள அணி இலங்கை அணியையும் 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேச அணியுடன் நடந்த போட்டி டிராவில் முடிந்த காரணத்தால் இந்திய அணி புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது . இந்திய அணி தனது 2வது ஆட்டத்தில் இலங்கை அணியை நாளை எதிர்கொள்கிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த முறை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படும் இந்திய அணி நாளை நடைபெறும் போட்டியின் மூலம் தனது வெற்றி கணக்கை தொடங்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
Related Tags :
Next Story