கத்தாரில் நடக்கும் உலக கோப்பையே தனது கடைசி போட்டி: கால்பந்து வீரர் நெய்மார் தகவல்!


கத்தாரில் நடக்கும் உலக கோப்பையே தனது கடைசி போட்டி: கால்பந்து வீரர் நெய்மார் தகவல்!
x
தினத்தந்தி 10 Oct 2021 10:12 PM GMT (Updated: 10 Oct 2021 10:12 PM GMT)

கத்தாரில் அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பையே தனது கடைசி போட்டியாக இருக்கலாம் என பிரபல கால்பந்து வீரர் நெய்மார் தெரிவித்துள்ளார்.


சா பாலோ,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபலமான கால்பந்தாட்ட வீரர் நெய்மர். இவருக்கு உலகெங்கிலும் கால்பந்தாட்ட ரசிகர்கள் பலர் உள்ளனர்.  29 வயதான இவர் கால்பந்தில் மிகப்பெரும் நட்சத்திர வீரராக வலம் வருகிறார். அடுத்த ஆண்டு நவம்பரில் கத்தாரில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியானது தனது கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கலாம் என்று நெய்மார் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை போட்டியை எனது கடைசி உலக கோப்பை போட்டியாகக் கருதி எதிர்கொள்வேன். ஏனெனில் அதன் பிறகு அடுத்த  உலகக்கோப்பை போட்டிக்கு நான் மனதளவில் தயாராக இருப்பேனா என்பது எனக்கு தெரியாது. எனவே அடுத்த ஆண்டு கத்தாரில் நடக்கும் உலக கோப்பையை வெல்வதற்கு என்னால் முடிந்த எல்லா முயற்சியையும் தனது அணிக்கு அளிப்பேன்’ என்று நெய்மார் குறிப்பிட்டார்.


Next Story