ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர் போட்டி 'டிரா'


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர் போட்டி டிரா
x
தினத்தந்தி 22 Nov 2021 8:24 AM GMT (Updated: 22 Nov 2021 8:24 AM GMT)

ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

கோவா,

8 வது ஐ . எஸ் .எல் கால்பந்து போட்டி  கடந்த  (வெள்ளிக்கிழமை)  தொடங்கியது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில்  ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர்  அணிகள் மோதின. 1-1 என்ற கோல் கணக்கில் இந்த போட்டி 'டிரா'வில் முடிந்தது.

ஆட்டத்தின் முதல் பாதியில் ஈஸ்ட் பெங்கால் அணியின் பிரான்ஜோ பிரைஸ் ஒரு கோலும் ஜாம்ஷெட்பூர் அணியின் பீட்டர் ஹார்ட்லி ஒரு கோலும் அடித்தனர். இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் எந்த கோலும் அடிக்கவில்லை. 

இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் ஆட்டத்தை  'டிரா'வில் நிறைவு செய்தன. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

Next Story