4 நாடுகள் பெண்கள் கால்பந்து: தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணியிடம் இந்தியா தோல்வி


4 நாடுகள் பெண்கள் கால்பந்து: தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணியிடம் இந்தியா தோல்வி
x
தினத்தந்தி 26 Nov 2021 8:37 PM GMT (Updated: 26 Nov 2021 8:37 PM GMT)

4 நாடுகளுக்கு இடையிலான பெண்கள் கால்பந்து போட்டி பிரேசிலில் நேற்று தொடங்கியது.

மானஸ்,

இந்தியா, பிரேசில், சிலி, வெனிசுலா ஆகிய 4 நாடுகள் இடையிலான சர்வதேச பெண்கள் கால்பந்து போட்டி பிரேசிலில் நேற்று தொடங்கியது. 

இதில் தொடக்க லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 57-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 7-வது இடத்தில் இருக்கும் வலுவான பிரேசிலை எதிர்கொண்டது. இதில் 70 சதவீதத்துக்கும் அதிகமான நேரங்களில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி 6-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை எளிதில் வீழ்த்தியது. 

பிரேசில் அணியில் டிபோரா ஒலிவிரா முதலாவது நிமிடத்திலும், ஜிவானா கோஸ்டா 36-வது நிமிடத்திலும், அரிடினா போர்ஜெஸ் 52-வது மற்றும் 81-வது நிமிடத்திலும், கிரோலின் பெராஸ் 54-வது நிமிடத்திலும், கீஸ் பெரிரா 76-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 

இந்திய அணி தரப்பில் மனிஷா கல்யாண் 8-வது நிமிடத்தில் கோல் போட்டார். சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி, பிரேசிலை சந்தித்தது இதுவே முதல்முறையாகும்.

Next Story