ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் அணியை வீழ்த்தியது மும்பை சிட்டி அணி
மொத்தம் 6 கோல்கள் அடிக்கப்பட்ட இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.
கோவா ,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஏ.டி.கே மோகன் பகான் - மும்பை சிட்டி அணிகள் மோதின. இந்த போட்டியின் 4 வது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியின் விக்ரம் பிரதாப் சிங் முதல் கோல் அடித்தார்.
போட்டியின் 25 வது நிமிடத்தில் மீண்டும் விக்ரம் பிரதாப் சிங் கோல் அடிக்க 2-0 என்ற கணக்கில் மும்பை சிட்டி அணி முன்னிலை பெற்றது.
இதை தொடர்ந்து மும்பை அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல் மழை பொழிய மோகன் பகான் அணியால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
இறுதியில் மும்பை அணி மொத்தம் 5 கோல்கள் அடிக்க மோகன் பகான் அணியால் 1 கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது . மொத்தம் 6 கோல்கள் அடிக்கப்பட்ட இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story