இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி
ஐதராபாத் அணி 5-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது.
கோவா ,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியின் 12-வது நிமிடத்தில் சிங்லென்சனா சிங் ஐதராபாத் அணியின் முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் 47 வது நிமிடத்தில் ஐதராபாத் அணியின் 2-வது கோலை பார்த்தலொமியூ அடித்தார். இதற்கு பதில் கோலாக ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் ரால்டே நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் முதல் கோலை அடித்தார்.போட்டியின் 78 வது நிமிடத்தில் பார்த்தலொமியூ மீண்டும் கோல் அடிக்க ஐதராபாத் அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
போட்டியின் 90-வது நிமிடத்தில் ஐதராபாத் அணியின் ஜாதவ் மேலும் அந்த அணிக்கு ஒரு கோல் அடித்தார்.மீண்டும் ஆட்டத்தின் 94-வது நிமிடத்தில் சிவேரியோ ஐதராபாத் அணிக்கு மேலும் ஒரு கோல் அடிக்க ஐதராபாத் அணி 5-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது.
Related Tags :
Next Story