ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் அணி வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - மோகன் பகான் அணிகள் மோதின.
கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - மோகன் பகான் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் 2 வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் வி.பி.சுஹைர் ஒரு கோல் அடித்தார் . இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோகன் பகான் அணியின் லிஸ்டன் கோலாகோ 45 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.இதனால் முதல் பாதியில் ஆட்டம் சமநிலையில் இருந்தது .
பின்னர் இரண்டாவது பாதியில் 52 வது, 76 வது நிமிடத்தில், மோகன் பகான் அணியின் ஹ்யூகோ பூமஸ் கோல் அடித்தார் .இதனால் மோகன் பகான் அணி முன்னிலை பெற்றது .87 வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் மசூர் ஷரீப் ஒரு கோல் அடித்தார்.
இதனால் ஏ.டி.கே மோகன் பகான் அணி 3-2 என்று வெற்றி பெற்றது
Related Tags :
Next Story