ஐ.எஸ்.எல் கால்பந்து: மோகன் பகான் - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி தள்ளிவைப்பு


ஐ.எஸ்.எல் கால்பந்து: மோகன் பகான் - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 16 Jan 2022 3:30 AM GMT (Updated: 16 Jan 2022 3:30 AM GMT)

நேற்று இரவு நடக்க இருந்த 61-வது லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் - பெங்களூரு எப்.சி. அணிகள் மோத இருந்தன.

பெங்களூரு,

கோவாவில் ரசிகர்கள் இன்றி நடந்து வரும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் நேற்று இரவு நடக்க இருந்த 61-வது லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் - பெங்களூரு எப்.சி. அணிகள் மோத இருந்தன. 

ஏ.டி.கே. மோகன் பகான் அணியினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் இந்த போட்டி கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் கடந்த 8-ந் தேதி நடக்க இருந்த ஏ.டி.கே. மோகன் பகான்-ஒடிசா அணிகள் இடையிலான போட்டி ஒத்திவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.

Next Story