ஐ.எஸ்.எல் கால்பந்து: மோகன் பகான் - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி தள்ளிவைப்பு
நேற்று இரவு நடக்க இருந்த 61-வது லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் - பெங்களூரு எப்.சி. அணிகள் மோத இருந்தன.
பெங்களூரு,
கோவாவில் ரசிகர்கள் இன்றி நடந்து வரும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் நேற்று இரவு நடக்க இருந்த 61-வது லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் - பெங்களூரு எப்.சி. அணிகள் மோத இருந்தன.
ஏ.டி.கே. மோகன் பகான் அணியினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் இந்த போட்டி கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் கடந்த 8-ந் தேதி நடக்க இருந்த ஏ.டி.கே. மோகன் பகான்-ஒடிசா அணிகள் இடையிலான போட்டி ஒத்திவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.
Related Tags :
Next Story