ஐ.எஸ்.எல். கால்பந்து: இன்று நடைபெறும் அரையிறுதியில் ஜாம்ஷெட்பூர் - கேரளா அணிகள் மோதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 March 2022 12:53 PM GMT (Updated: 11 March 2022 12:53 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்தின் அரையிறுதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்- கேரளா அணிகள் இன்று மோதுகின்றன.

கோவா, 

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த அரையிறுதி போட்டிக்கு ஜாம்ஷெட்பூர், கேரளா , ஐதராபாத், ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

அதன்படி இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில்  ஜாம்ஷெட்பூர் - கேரளா அணிகள் மோத உள்ளன. 


Next Story